இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று புத்ராஜெயாவில் உள்ள பிரதமர் அன்வர் இப்ராஹிம் அலுவலகத்தில் அ மரியாதை நிமித்தமாக சந்தித்தார். பக்காத்தான் ஹராப்பான் தலைவர் அன்வார் 10ஆவது பிரதமராக நவம்பர் 24ஆம் தேதி பதவியேற்ற பிறகு இருவருக்குமிடையிலான சந்திப்பு இதுவே முதல்முறையாகும்.
ஃபேஸ்புக் பதிவில், முன்னாள் பிரதமரின் வருகையைப் பாராட்டுவதாகவும், பல்வேறு தற்போதைய பிரச்சினைகள் குறித்து அவர்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டதாகவும் அன்வார் கூறினார். அவர் (எனக்கு) அளித்த ஆதரவு மற்றும் ஊக்கத்திற்கு எனது பாராட்டுகளையும் தெரிவித்தேன் என்று அன்வார் கூறினார்.
அம்னோ துணைத் தலைவராக இருக்கும் இஸ்மாயில், 17 மாத கால ஆட்சிக்குப் பிறகு பெரிகாத்தான் நேஷனல் தலைவர் முஹிடின் யாசின் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20 அன்று ஒன்பதாவது பிரதமராக நியமிக்கப்பட்டார். இஸ்மாயில் 14 மாதங்கள் பிரதமராக பதவி வகித்தார்.