புத்ராஜெயா: லஞ்சம் அல்லது அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் எவரும் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள் என்று அமைச்சரவை உறுப்பினர்களை எச்சரித்ததன் மூலம் ஊழலுக்கு எதிரான தனது முதல் முயற்சியை பிரதமர் அன்வார் இப்ராஹிம் தொடங்கியுள்ளார்.
தான் வழிநடத்தும் ஒற்றுமை அரசாங்கத்தில் இத்தகைய கலாச்சாரத்தில் சமரசம் செய்து கொள்ள மாட்டேன் என்று அன்வார் கூறினார்.நான் தேர்வு செய்த அமைச்சர்களிடம் முதலில் ஊழல் கூடாது என்று தெரிவித்துள்ளேன்.
ஊழலில் அமைச்சர்கள் யாரேனும் ஈடுபட்டிருந்தால், அவர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று அனைத்துக் கட்சித் தலைவர்களிடமும் நான் தெரிவித்துள்ளேன் என்று அவர் இன்று நடைபெற்ற Program Pertemuan Mahabbah Perdana Menteri Bersama Ulama dan Asatizah நிகழ்ச்சியில் தனது உரையில் கூறினார்.
இந்த நினைவூட்டல் அரசியல் வித்தை அல்ல என்றும், ஊழலில் இருந்து நாட்டை விடுவிக்க முடியும் என்ற நம்பிக்கை என்றும் பிரதமர் கூறினார்.