விஜய் அரசியலுக்கு வருவாரா ? தாயார் ஷோபா சொன்ன புதிய தகவல்

நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் காஞ்சிபுரத்தில் உள்ள உலக பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோயிலுக்கு வருகை தந்திருந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது ; எல்லாரும் நல்ல இருக்கணும்’னு வேண்டிக்கத்தான் இங்கு வந்தேன்.

காமாட்சி அம்மனின் தரிசனம் பார்த்தேன். விஜய் படம் நல்ல இருக்கணும்’னு வேண்டிக்கங்க எல்லாரும்” என்றார். மேலும் விஜய் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்விக்கு , விஜய் என்ன முடிவு எடுக்கிறாரோ அதான்.

கடவுள் என்ன நினைக்கிறாரோ அதான். அவரின் அரசியல் வருகை பற்றி எனக்கோ என் கணவருக்கோ எதுவுமே தெரியாது” என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here