தைவானிலிருந்து சிங்கப்பூர் புறப்பட இருந்த விமானத்தில் திடீரென பவர்-பேங்க் வெடித்ததால் பரபரப்பு

தைவான் நாட்டிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட தயாராகி கொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவர் வைத்திருந்த பவர்-பேங்க் ஒன்று திடீரென வெடித்து, தீப்பற்றி எரிந்தது. இதனால், மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக விமான பணிப்பெண்கள் சம்பவ பகுதிக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தில் பவர்-பேங்க் சார்ஜரின் உரிமையாளர் மற்றும் அவரது அருகே அமர்ந்திருந்த நபர் என இருவர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால், மருத்துவமனையில் அவர்கள் இருவரையும் சேர்க்க வேண்டிய தேவை ஏற்படவில்லை.

அதிக நேரம் பயன்படுத்தியதால் சூடாகி, குறித்த பவர்-பேங்க் தீப்பிடித்து எரிந்ததாக நம்பப்படுகிறது.

தீயை அணைத்த பின்னர் விமானத்தில் முழு அளவில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சம்பவத்திற்கு ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் சார்பில் மன்னிப்பு கேட்கப்பட்டது.

விமான பயணிகள் மற்றும் விமான ஊழியர்களின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம் என அதுபற்றி வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here