கோலாலம்பூர்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் இன்று மதியம் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.
இன்று தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அன்வார், இந்த சந்திப்பில் தானும் பாலகிருஷ்ணனும் பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு இருதரப்பு மற்றும் பிராந்திய பிரச்சனைகள் குறித்து கருத்துகளை பரிமாறிக்கொண்டதாக கூறினார்.
பொருளாதாரத்தில் கவனம் செலுத்தவும், நிலுவையில் உள்ள இருதரப்பு பிரச்சினைகளை விரிவான முறையில் தீர்ப்பதில் ஒன்றாக முன்னேறவும் எனது விருப்பத்தை வெளிப்படுத்தினேன் என்று அவர் கூறினார்.
பாலகிருஷ்ணன் ஞாயிறு முதல் புதன் (ஜனவரி 15-18) வரை நான்கு நாள் உத்தியோகபூர்வ பயணமாக மலேசியா வந்துள்ளார். மலேசியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான சிறந்த நீண்ட கால நெருங்கிய உறவுகளை இரு வெளியுறவு அமைச்சர்களும் மீண்டும் உறுதிப்படுத்திய அவர் இன்று தனது இணை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜம்ரி அப்துல் காதிருடன் ஒரு சந்திப்பை நடத்தினார்.
நேற்று முன்தினம் மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா இஸ்தானா நெகாராவில் பாலகிருஷ்ணனை சந்தித்தார்.