வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஜோகூரில் 757 பேராகவும், சபாவில் 134 பேராகவும் பதிவு

இன்று மாலை 4 மணி நிலவரப்படி, ஜோகூர் மற்றும் சபா ஆகிய மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 757 பேராக உள்ளது.

ஜோகூரில், இன்று காலை 8 மணி நிலவரப்படி, வெள்ளம் காரணமாக வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 670 பேராக இருந்து, இன்று மாலை 623 பேராகக் குறைந்துள்ளதாக, மாநில பேரிடர் மேலாண்மைக் குழு (JPBN) அறிவித்தது.

சபாவில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 குடும்பங்களைச் சேர்ந்த 134 பேராக உள்ளது என்று மாநில பேரிடர் மேலாண்மை குழு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here