ஜாலான் சிபு-பிந்துலுவில் இன்று காலை மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில், வேன் ஓட்டுநர் ஒருவருக்கு முகத்தின் வலது பக்கம் மற்றும் காலிலும் காயம் ஏற்பட்டது.
இன்று காலை 8.55 மணியளவில் ஓட்டுநர் நிறுவனத்திற்கு முன்பாக வேன், லோரி மற்றும் பிக்கப் டிரக் மோதி விபத்துக்குள்ளானதாக, சிபு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
தமது துறைக்கு வந்த அவசர அழைப்பை தொடர்ந்து, சிபு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.
“விபத்து நடந்த இடத்திற்கு அவர்கள் வந்தபோது, வேனில் 28 வயதுடைய ஒரு நபர் தனது இருக்கையில் சிக்கியிருப்பதைக் கண்டார்கள், உடனடியாக சிறப்பு உபகரணங்களின் உதவியுடன் பாதிக்கப்பட்டவரை அகற்றினர்.
“முகத்தில் காயம் மற்றும் இரண்டு கால்களும் உடைந்த நிலையில், பாதிக்கப்பட்டவர் உடனடி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்,” என்று அவர் கூறினார்.