கியூபாவில் ஒரு வார காலமாக பற்றி எரியும் காட்டுத் தீ..!

கியூபாவில் ஒரு வார காலமாக கட்டுக்கடங்காமல் பற்றி எரிந்து வரும் காட்டுத் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர்.

அச்சுறுத்தி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அந்நாட்டின் பாதுகாப்புத் துறை களமிறங்கியுள்ளது. விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

ஹோல்குயினில் கிழக்கு பினாரஸ் டி மயாரி மலைப்பகுதிகளில் கிட்டத்தட்ட 7 நாட்களாக பற்றி எரியும் காட்டுத்தீயால் சுமார் 2, 223 ஏக்கர் பரப்பிலான வனப்பகுதி சாம்பலாகியுள்ளது எனக் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here