ஜோகூர் பத்து பகாட்டிலுள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளோர் எண்ணிக்கை 10,396 பேராக குறைந்தது

ஜோகூரின் ஏனைய மாவட்டங்கள் வெள்ளத்திலிருந்து மீண்டுவிட்ட நிலையில், பத்து பகாட் மாவட்டத்திலும் வெள்ள நிலைமை தொடர்ந்து மேம்பட்டு வருகிறது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி, அங்குள்ள 51 தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை மொத்தம் 10,396 பேராகக் குறைந்துள்ளது, இது நேற்றிரவு 8 மணிக்கு 13,872 பேராக இருந்தது என்று, தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here