பத்து பஹாட்டில் நின்று கொண்டிருந்த லோரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்

பத்து பஹாட், ஜாலான் புக்கிட் பாசிர்-டோங்காங் பெச்சாவில் KM3.5 இல் நிறுத்தப்பட்டிருந்த லோரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இரண்டு வெளிநாட்டு ஆடவர்கள் கொல்லப்பட்டனர்.  இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 26) இரவு 11.20 மணியளவில் நிகழ்ந்ததாக பத்து பஹாட் OCPD உதவி ஆணையர் இஸ்மாயில் டோல்லா தெரிவித்தார்.

லொறி ஓட்டுநர், 37 வயதுடையவர், வாகனத்தை சாலையின் இடதுபுறத்தில் நிறுத்தியிருந்தார். மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் பின்புறத்தின் வலது பக்கத்தில் மோதியது.

விபத்தால் பாதிக்கப்பட்ட இருவரும் பலத்த காயங்களுக்கு ஆளாகினர். மேலும் அவர்கள் அந்த இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இருவரும் வெளிநாட்டவர்கள் என்று நம்பப்படுகிறது, அவர்களின் அடையாளங்களைக் கண்டறிய விசாரணைகள் இன்னும் நடந்து வருகின்றன என்று அவர் திங்கள்கிழமை (மார்ச் 27) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சுல்தானா நோரா இஸ்மாயில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 41(1)ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here