குவா மூசாங்கில் திடீர் வெள்ளம்

நேற்று நண்பகல் 1.30 மணிக்கு தொடங்கி ஒன்றரை மணி நேரம் விடாது பெய்த கனமழையைத் தொடர்ந்து, குவா மூசாங் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

பண்டார் பாருவில் உள்ள குவா மூசாங் மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் முன், KFC துரித உணவு உணவகத்திற்கு அருகிலுள்ள போக்குவரத்து விளக்கு சந்திப்பு மற்றும் தாமான் த்ரோபிக்கா ஆகிய பகுதிகள் திடீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன.

சாலைப்பயணரான 43 வயதான சசாலி இப்ராஹிம் கூறுகையில், சாலையில் வழிந்தோடும் தண்ணீரைப்பார்க்கும்போது அந்த வழியாக செல்ல தைரியம் இல்லாததால் , நான் வாகனத்தை நிறுத்தி தண்ணீர் வற்றும்வரை காத்திருக்க வேண்டியிருந்தது.

IPD குவா மூசாங் முன் சாலையில் வழிந்தோடும் மழைநீரை கனரக வாகனங்கள் மட்டுமே கடந்து செல்ல முடியும் என்றார்.

“தண்ணீர் மிகவும் ஆழமாகவும் வேகமாகவும் இருந்ததைக் கண்டதால் நான் அதைக் கடக்கத் துணியவில்லை. அதனால் தண்ணீர் முழுவதுமாக குறையும் வரை இங்கு காத்திருந்தேன்.

“நிச்சயமற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட இந்த வெள்ளம் எதிர்பாராதது என்றும் பல வாகனங்கள் இப்போது IPD குவா மூசாங் மற்றும் தாமான் த்ரோபிக்கா முன் நிறுத்தப்பட்டுள்ளன,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here