இந்த ஆண்டு நோன்புப்பெருநாள் கொண்டாட்டத்துடன் இணைந்து பேராக் மாநில நிர்வாகத்தின் கீழுள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் RM700 சிறப்பு உதவியை பேராக் அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.
இந்தச் சிறப்பு உதவி ஏப்ரல் 17 அன்று விநியோகிக்கப்படும் என்றும், இதற்காக மொத்தம் RM5.63 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இது மாநிலத்தில் உள்ள 7,892 அரசு ஊழியர்களுக்கு பயனளிக்கும் என்றும் மணிலா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சாரணி முகமட் கூறினார்.
“கடந்த ஆண்டைப் போலவே, பேராக் மாநில சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர்களுக்கும் ஒரு நபருக்கு RM500 வீதம் இந்த சிறப்பு நோன்புப்பெருநாள் உதவி விநியோகிக்கப்படும் என்றும் கூறினார்.