முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு அரச மன்னிப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு மாமன்னரிடம் அம்னோ உச்ச மன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
அம்னோ பொதுச்செயலாளர் அசிரஃப் வாஜ்டி டுசுகி கூறுகையில், நஜிப்பிற்கு அரச மன்னிப்பு வழங்க வேண்டும் என்று கேட்டு மன்னரிடம் ஒரு குறிப்பாணையை சமர்ப்பிக்க உச்ச மன்றம் அதன் தொகுதிகளை நாடவுள்ளது.
ஒரு அறிக்கையில், 191 அம்னோ பிரிவுகளால் உயர்மட்டத் தலைமையிடம் இந்த மகஜர் ஒப்படைக்கப்பட்டதாகவும், உச்ச மன்றம் கையெழுத்திட்டதாகவும் அசிரஃப் கூறினார்.










