மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய் நந்தினி மற்றும் மந்தாகினி என்ற இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். குறிப்பாக மந்தாகினி கதாப்பாத்திரம் இரண்டாம் பாகத்தில் பல திருப்பங்களுக்கு காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தப் படம் வருகிற 28 ஆம் தேதி வெளியாகிறது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பொன்னியின் செல்வன் 2 பாடல்களும் டிரெய்லரும் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இருப்பினும் முதல் பாகத்தை ஒப்பிடுகையில் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறைவாகவே இருப்பதாக தெரிகிறது. இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ஜெயராம், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் ஐஸ்வர்யா ராய்யின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. புரோ கபடி லீக் போட்டி ஒன்றில் தனது கணவர் அபிஷேக் பச்சனின் ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி விளையாடும் போட்டியைக் காண வந்திருந்தார். அவருடன் அபிஷேக் பச்சன், மகள் ஆராத்யா மற்றும் அபிஷேக்கின் சகோதரியின் மகள் நவ்யா நந்தா உடனிருந்தனர்.
இதன் ஒரு பகுதியாக அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராயிடம் ஏதோ கூற அதற்கு ஐஸ்வர்யா கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக கண்களை உருட்டி பார்க்கிறார். மேலும் அவர் உறவினர் மீதும் கோபப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.