வெப்பநிலை உயர்வு : பள்ளிகளின் வெளிப்புறச் செயல்பாடுகள் அனைத்தும் தற்காலிகமாக தடை – கல்வி அமைச்சர்

தற்போது நிலவும் வெப்பமான காலநிலையைத் தொடர்ந்து, வெப்பத் தாக்குதலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளி வெளிப்புற நடவடிக்கைகளும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளன.

இந்த தடை தொடர்பான சுற்றறிக்கையை நேற்று புதன்கிழமை (மே 3) அமைச்சகம் வெளியிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் தெரிவித்தார்.

நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் சுற்றறிக்கையை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

“நேற்று முதல் நடைமுறைக்கு வந்த இந்த தசை உத்தரவு சுற்றறிக்கையில் காலை மற்றும் மதியம் பள்ளி அமர்வுகள் மற்றும் கற்றல் முழுவதுமாக வகுப்பறையில் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது,” என்று நேற்று (மே 4) கோலா சிலாங்கூரில் உள்ள தஞ்சோங் காராங்கில் நடந்த ஆசிரியர் நிகழ்ச்சியில் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here