எதிர்வரும் மாநில தேர்தல்களில் வேறு கட்சி சார்பில் போட்டியிடும் எண்ணம் இல்லை என்று முன்னாள் பாசீர் சாலாக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ தாஜுடின் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அம்னோ உச்ச மன்ற உறுப்பினரான அவர், அம்னோ உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதுடன், 6 ஆண்டுகளுக்கு அம்னோவைவிட்டு இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
“நான் அம்னோவால் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்காவிட்டால், நிச்சயமாக நான் தேர்தல் பிரச்சாரம் செய்து கட்சிக்காக வேலை செய்வேன். மாறாக மற்ற கட்சிகளுடன் இணைந்து செயற்பட எனக்கு விரும்பவில்லை,” என்று அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 7) நடந்த அவரது நோன்புப்பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் செய்தியாளர்களிடம் கூறினார்.
கடந்த அக்டோபர் 2022 இல் அவரது உறுப்பினர் பதவியை இடைநிறுத்த அம்னோ உச்ச மன்றம் முடிவு செய்தது. இருப்பினும் தாஜுடின் தனது ஆறு வருட இடைநிறுத்தம் தொடர்பாக மேன்முறையீடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.