லாரூட்: இந்த ஆண்டு நடைபெற உள்ள 6 மாநிலத் தேர்தல்களுக்கான பெரிகாத்தான் நேஷனல் (PN) கூறு கட்சிகளுக்கு இடையேயான தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. PN பொதுச்செயலாளர் ஹம்சா ஜைனுடின் கூறுகையில், கடைசி மூன்று அல்லது நான்கு இடங்கள் குறித்து முடிவு செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
நாங்கள் பல கூட்டங்களை நடத்தியுள்ளோம்.மூன்று அல்லது நான்கு இடங்களுக்கு மட்டுமே கூடுதல் விவாதங்கள் தேவை என்று அவர் இன்று லாரூட் நாடாளுமன்றத் தொகுதி ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பில் செய்தியாளர்களிடம் கூறினார்.
சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு, கெடா, தெரெங்கானு மற்றும் கிளந்தான் ஆகியவை இந்த ஆண்டு தேர்தல்களை நடத்த வேண்டும். ஏனெனில் அவை கடந்த ஆண்டு பொதுத் தேர்தலுடன் தங்கள் மாநிலத் தேர்தலை நடத்தவில்லை. வரவிருக்கும் மாநிலத் தேர்தலில் PN இன் வாய்ப்புகள் குறித்து கேட்டதற்கு, லாரூட் நாடாளுமன்ற உறுப்பினரான ஹம்சா, கூட்டணியின் செயல்பாடு மக்களின் கருத்தைப் பொறுத்தது என்றார்.




















