மலேசியாவில் விபத்தில் சிக்கிய பிரபல பின்னனி பாடகி ரக்ஷிதா சுரேஷ்

தென்னிந்திய சினிமாவில் பிரபல பாடகியாக வலம் வரும் ரக்ஷிதா சுரேஷ். மலேசியாவில் விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தபோது ரக்ஷிதா சுரேஷ் பயணத்து கொண்டிருந்த கார் காலையில் இருந்த டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது.  தனியார் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஜூனியர் – சீனியர் என இரண்டு சீசன்களிலும் கலந்து கொண்ட ரக்ஷிதா சுரேஷ் சூப்பர் சிங்கர் 6 நிகழ்ச்சியில் ரன்னர் அப்-ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முன்னதாக தனியார் டிவியின் கன்னடா சேனலில் நடைபெற்ற லிட்டில் ஸ்டார் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரக்ஷிதா சுரேஷ் டைட்டில் வின்னர்-ஆக வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் தற்போது கார் விபத்தில் சிக்கிய, பாடகி ரக்ஷிதா சுரேஷ் தனது சமூக வலைதள பக்கங்களில், “இன்று பெரிய விபத்தில் சிக்கினேன். இன்று காலை மலேசிய விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தபோது சாலையில் இருந்த டிவைடரில் பலமாக மோதிய கார் சாலையின் மறுபகுதிக்கு சென்றது.

இந்தப் பெரிய பாதிப்பில் என் மொத்த வாழ்க்கையும் அந்த 10 வினாடிக்குள் என் கண் முன் தோன்றின.ஏர் பேக்குகளுக்கு நன்றிகளை தெரிவிக்கிறேன். இல்லையென்றால் நிலைமை மிகவும் மோசமாகி இருக்கும். இப்போதும் நடந்தது மிகவும் நடுக்கமாக இருக்கிறது. நானும், காரை இயக்கி வந்த டிரைவரும் உடன் பயணித்த இன்னொரு வரும் லேசான வெளி காயங்களோடும் சிறு உட்காயங்களோடும் பாதுகாப்பாக இருக்கிறோம் என நினைக்கும் போது கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது. என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here