குபு தமிழ்ப்பள்ளியின் 38ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டி

குபு தமிழ்ப்பள்ளியின் 38 ஆம் ஆண்டு போட்டி விளையாட்டு மாணவர்களின் அணிவகுப்புடன் குபு மைதானதில் சிறப்பாக நடைபெற்றது.
இவ்வாண்டு சிறந்த விளையாட்டு குழுவாக நீல இல்லம் வாகை சூடியது. சிறந்த கூடாரத்தை வடிவமைத்த குழுவாக  சிவப்பு இல்லம் வெற்றிப் பெற்றது.
மாணவர்கள் விளையாட்டில் உள்ள தனித்திறமைகளை வெளிக் கொணரும் வகையில் நடைபெற்ற பல்வேறு போட்டியில் மாணவர்கள் திறமையாக விளையாடினர்.
பள்ளியின் விளையாட்டு வீரரான  செ. முருகவேல் வெற்றிப் பெற்றார். சிறந்த விளையாட்டு வீராங்கனையாக என். யாஷினி வெற்றிப் பெற்றார்.
குறுகிய காலம் பயிற்சியாக இருந்தாலும் ஆசிரியர்கள் மாணவர்களை சிறந்த முறையில் போட்டிக்கு தயார் படுத்தி இருந்தனர்.
பள்ளியின் புறப்பாட நடவடிக்கை பொறுப்பு ஆசிரியர் இரா.உமாபதி தலைமையில் நடைபெற்ற போட்டி விளையாட்டில் மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும் பங்குக் கொண்டனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், இல்லங்களுக்கும் பரிசு கேடயங்கள், சுழற் கிண்ணங்கள் வழங்கப்பட்டன.
பள்ளியின் போட்டி விளையாட்டினை சிறப்பாக நடத்திக் கொடுத்த பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர்,பொறுப்பு ஆசிரியர்களுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி கோகிலம் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here