கழிவுநீர் தொட்டியில் சடலம் மீட்கப்பட்டதன் தொடர்பில் 8 பேர் தேடப்படுகின்றனர்

கோல கங்சாரில்   மே 14 அன்று கழிவுநீர் தொட்டியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட இந்தோனேசிய நபரின் கொலை தொடர்பாக எட்டு சந்தேக நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பேராக் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் யூஸ்ரி ஹாசன் பஸ்ரி, சந்தேக நபர்களும் இந்தோனேசியர்கள் என்றும், பாதிக்கப்பட்டவரின் நண்பர்கள் என்றும் கூறினார்.

நாங்கள் அவர்களை அடையாளம் கண்டு, அவர்களை தேடி வருகிறோம். விசாரணைகளை முடித்து, வழக்கை துணை அரசு வழக்கறிஞரிடம் ஒப்படைப்பதற்கு எங்களுக்கு அவகாசம் கொடுங்கள் என்று அவர் நேற்றிரவு இங்கு அருகிலுள்ள போடாவில் உள்ள பேராக் தெங்கா மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் பேராக் காவல்துறை ஹரிராயா உபசரிப்பில் செய்தியாளர்களிடம் கூறினார். பேராக் சுல்தான் சுல்தான் நஸ்ரின் ஷா விழாவில் கலந்து சிறப்பித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here