பக்காத்தான் ஹராப்பான் கட்டுப்பாட்டில் இருக்கும் சிலாங்கூரை பெரிக்காத்தான் கைப்பற்றலாம் என்கிறார் இட்ரிஸ் அகமட்

வரும் மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கட்டுப்பாட்டில் இருக்கும் சிலாங்கூர் மாநிலத்தை பெரிகாத்தான் நேஷனல் கைப்பற்றுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது, என்று டத்தோ இட்ரிஸ் அகமட் தெரிவித்துள்ளார்.

“குறிப்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (மே 21) நடைபெற்ற பெரிக்காத்தான் கூட்டணியின் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பின்போது கிடைத்த அனுசரணை மற்றும் மக்களின் வரவேற்பைத் தொடர்ந்து, பெரிகாத்தான் நேஷனல் சிலாங்கூரைக் கைப்பற்றுவது குறித்து மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பதாக” பாஸ் துணைத் தலைவரான அவர் கூறினார்.

தங்களது கூட்டணிக்குள் ஆசனப் பங்கீடு தொடர்பான விவாதங்கள் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளதாகவும், மேலும் அவர்களுக்கிடையே தேர்தல் தொடர்பான விவாதங்கள் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

தற்போது பாஸ் வசம் உள்ள கிளாந்தான், திரெங்கானு மற்றும் கெடா ஆகிய மாநிலங்களை வரும் மாநிலத் தேர்தல்களில் தக்கவைத்துக் கொள்வதில் தமக்கு நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here