தெரெங்கானு சட்டமன்றம் கலைக்கப்படுவது குறித்த தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை

மாராங்: மாநிலத் தேர்தலுக்கு வழி வகுக்கும் வகையில் தெரெங்கானு மாநில சட்டப் பேரவையைக் கலைக்கும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று மந்திரி பெசார் அகமது சம்சூரி மொக்தார் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இந்த விவகாரம் தொடர்பான சில தேதிகள் சிந்திக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை முதலில் தெரெங்கானு  சுல்தான் மிசான் ஜைனால் அபிதினிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

துவாங்கு சுல்தானுடன் எனக்கு எப்போது சந்திப்பு என்பதும் இன்னும் தெரியவில்லை. இந்த விஷயத்தில் துவாங்கு சுல்தானிடனாம சந்திப்பு குறித்து நான் இன்னும் தேடவில்லை.

முதலில் துவாங்கு சுல்தானுக்குத் தெரிவிக்கிறேன் பிறகு சட்டமன்ற கலைப்பிற்கான  தேதியை அறிவிப்பேன். ஜூன் 30 வரை எங்களுக்கு இன்னும் நேரம் உள்ளது (மாநில சட்டமன்றம் தானாகவே கலைக்கப்படும் போது)” என்று அவர் நேற்று இரவு இங்கு மாராங் பெரிகாத்தான் நேஷனல் (PN) தேர்தல் இயந்திரத்தை அறிமுகப்படுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here