மாநில தேர்தல்களுக்கு வழி வகுக்கும் வகையில், எதிர்வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 23) அன்று சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தை கலைக்க சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா ஒப்புதல் அளித்தார்.
இன்று காலை இஸ்தானா ஆலாம் ஷா அரச மண்டபத்தில் நடந்த மாநில சட்டசபை கலைப்பு விழாவில், சிலாங்கூர் சுல்தான் பிரத்தியேக செயலாளர் டத்தோ முகமட் முனிர் பானி இதை அறிவித்தார்.
மேலும் மாநில சட்டசபை கலைப்பு தொடர்பான பிரகடனத்திலும் சுல்தான் கையெழுத்திட்டார்.
முன்னதாக, மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி சிலாங்கூர் சுல்தானை சந்தித்து மாநில சட்டமன்றத்தை கலைக்க அவரின் ஒப்புதலைக் கோரியிருந்தார்.
இன்று நடைபெற்ற விழாவில் சிலாங்கூர் தெங்கு அமீர் ஷா சுல்தான் ஷராபுதீன் இத்ரிஸ் ஷாவின் ராஜா மூடாவும் கலந்து கொண்டார்.
அத்தோடு மாநிலச் செயலாளர் டத்தோ ஹரிஸ் காசிம், சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தலைவர் இங் சூயி லிம் மற்றும் திவான் திராஜா சிலாங்கூர் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.