30,000 ரிங்கிட் மதிப்பிலான தாலிக்கொடியை பறிகொடுத்த கீதா

மெந்தகாப், ஜாலான் மோக் ஹீ கியாங்கில் உள்ள பல்பொருள் அங்காடியின் முன், ரிங்கிட் 30,000 மதிப்புள்ள தாலிக் கொடியை  ஆசிரியரான கீதா கிருஷ்ண நாயர் இழந்துள்ளார்.

எவ்வாறாயினும், நேற்று மதியம் 1.40 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 49 வயதான நபருக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

Temerloh துணை காவல்துறைத் தலைவர் ரோஸ்லீ ஓமரின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்ட பெண் ஷாப்பிங்கை முடித்துவிட்டு சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த தங்கள் காரை நோக்கி தனது குழந்தையுடன் நடந்து சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

அப்போது, ​​யமஹா ஒய்16 மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பாதிக்கப்பட்ட பெண்ணை அணுகி, அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றார்.

பாதிக்கப்பட்டவரிடம் இருந்து நகைகளை பறித்த பின்னர், சந்தேக நபர், கருப்பு ஜாக்கெட் மற்றும் சாம்பல் நிற ஹெல்மெட் அணிந்து, உடனடியாக தப்பி ஓடிவிட்டார் என்று அவர் மேற்கோள் காட்டினார்.

அருகிலுள்ள வளாகத்தில் இருந்து ரகசிய கேமிரா (CCTV) காட்சிகளின் அடிப்படையில், சந்தேக நபர் வெள்ளை யமஹா Y16 மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றதாகவும், ஆனால் பதிவு எண் தெளிவாகத் தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

சந்தேக நபரை அடையாளம் காண போலீசார் இன்னும் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர், மேலும் இந்த வழக்கு குற்றவியல் சட்டம் (கொள்ளைக்காக) பிரிவு 392 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here