முக ஒப்பனை கடையில் இரு பல்கலைக்கழக மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டவர் கைது

சுபாங் ஜெயா: (முக ஒப்பனை) மேக்அப் கடையில் இரண்டு பல்கலைக்கழக மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படும் ஏமன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சனிக்கிழமை (ஜூலை 8) ஒரு அறிக்கையில், சுபாங் ஜெயா OCPD உதவி ஆணையர் வான் அஸ்லான் வான் மாமட், சம்பவம் நடந்த போது ஜூலை 6 ஆம் தேதி சன்வே பிரமிடில் உள்ள ஒப்பனைக் கடையில் 17 மற்றும் 18 வயதுடைய இரண்டு சிறுமிகள் இருந்தனர்.

பாதிக்கப்பட்டவர்கள் சன்வே துணைப் போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து 20 வயது வேலையில்லாத சந்தேக நபர் பிடிபட்டார். மேலும் அந்த நபரிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவரிடம் அடையாள ஆவணங்கள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. அவர் ஜூலை 20 வரை காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று அவர் கூறினார்.

ஏசிபி வான் அஸ்லான் மேலும் கூறுகையில், பாதிக்கப்பட்டவரிடம் தவறான  நோக்கில் பலத்தை பயன்படுத்தியதற்காக குற்றவியல் சட்டத்தின் 354ஆவது பிரிவின் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here