அதிகாலையில் ஏற்பட்ட தீ; 27 குடும்பங்கள் தங்குமிடத்தை இழந்தன

இன்று அதிகாலையில், பாரமின் அபோவில் உள்ள நீண்ட வீட்டுக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் மொத்தம் 27 குடும்பங்கள் தங்கள் தங்கும் இடங்களை இழந்துள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பில் நள்ளிரவு 1.33 மணிக்கு அழைப்பு வந்ததையடுத்து, தீயணைப்பு உறுப்பினர்கள் குழு ஒன்று சம்பவ இடத்திற்கு உடனடியாக அனுப்பப்பட்டதாக மருடி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

“அதிகாலை 2.30 மணியளவில் நீண்ட வீட்டுப் பகுதியில் வசிப்பவர்களின் உதவியுடன் தீயை வெற்றிகரமாக தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.

மேலும் அவர் கூறுகையில், தீ விபத்துக்கான காரணம் மற்றும் மொத்த இழப்பு இன்னும் விசாரணையில் உள்ளது என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here