பெரிய விபத்தில் செயலிழந்த கால்.. மீண்டு வந்து கலக்கும் அரவிந்த்சாமி

90 களின் சாக்லேட் பாய், பெண்களின் கனவு கண்ணன் என அழைக்கப்பட்டவர் அரவிந்த் சாமி. இப்போது கூட மாப்பிள்ளை நன்றாக இருந்தால் அரவிந்த் சாமி மாப்பிள்ளை என சொல்பவர்கள் உண்டு.

கடந்த 1991 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் – மம்மூட்டி என இரண்டு ஜாம்பவான்களுக்கு நடுவே தளபதி படத்தில் அறிமுகமானார் அரவிந்த் சாமி. இந்தப் படத்தில் ரஜினிகாந்த்தின் தம்பியாக அவரையே எதிர்க்கும் கதாப்பாத்திரம். ஒரு அறிமுக நடிகருக்கு இவ்வளவு வலுவான கதாப்பாத்திரம் அமைந்துவிடுமா என்பது சந்தேகமே. அதனை தனது நடிப்பின் மூலம் தனது தேர்வை நியாயப்படுத்தினார் அரவிந்த் சாமி.

அடுத்த ஆண்டே தன்னை அறிமுகப்படுத்திய மணிரத்னத்தின் இயக்கத்தில் ரோஜா படத்தில் ஹீரோவாக நடித்தார். சின்ன சின்ன ஆசை, புது வெள்ளை மழை என ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தப் படம் தமிழ் மட்டுமல்லாமல் இந்திய அளவில் பெரும் வெற்றியைப் பதிவு செய்தது.

மறுபடியும், பாம்பே, மின்சார கனவு என தமிழின் மிக முக்கியமான படங்களில் நடித்தார். சாத் ரங் கே சப்னே என்ற படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார். 2000 ஆம் ஆண்டு மணிரத்னத்தின் அலைபாயுதே படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த அரவிந்த் சாமி அதன் பிறகு தனது 30வது வயதில் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொள்ள முடிவெடுத்தார்.

தொழிலில் இருந்து ஆர்வம் காரணமாக டேலண்ட் மேக்ஸிமஸ் என்ற நிறுவனத்தை துவங்கிய அவர் அதில் தீவிரமாக ஈடுபட்டார். கடந்த 2022 ஆம் ஆண்டில் அந்த நிறுவனத்தின் மதிப்பு ரூ.3,300 கோடி என கூறப்படுகிறது. இருப்பினும் அது உறுதிபடுத்தப்படவில்லை.

இந்த நிலையில் கடந்த 2005 ஆம் ஆண்டு பெரும் விபத்தில் சிக்கினார். அந்த விபத்தில் அவருக்கு கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு, ஒரு கால் செயல்படாமல் இருந்துள்ளது. தொடர்ந்து 4, 5 ஆண்டுகள் தொடர்ந்து அதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டுள்ளார்.

இதற்கிடையில் இயக்குநர் மகேந்திரனின் சாசனம் படத்தில் அவர் கேட்டுக்கொண்டதற்காக நடித்தார்.விபத்திலிருந்து மீண்டு வந்த அவர், தன்னை அறிமுகப்படுத்திய மணிரத்னத்தின் கடல் படத்திலேயே கம்பேக் கொடுத்தார். தொடர்ந்து சினிமாவில் அடுத்த ரவுண்டை தொடங்கி சாதித்து வருகிறார் அரவிந்த் சாமி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here