கென்டாரி:
இந்தோனேசியாவின் சுலாவெசி தீவு கரையோரப் பகுதிக்கு அருகே, இன்று (ஜூலை 24) படகு ஒன்று மூழ்கியதில் குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர்; 19 பேரைக் காணவில்லை.
அந்தப் படகில் 40 பேர் இருந்தனர் என்றும், உள்ளூர் நேரப்படி நள்ளிரவு வாக்கில் அப்படகு மூழ்கியதாக இந்தோனேசிய தேடுதல், மீட்பு அமைப்பின் உள்ளூர் அலுவலகம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
இச்சம்பவத்தில் அறுவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். படகு மூழ்கியதற்கான காரணம் குறித்து விசாரிக்கப்படுவதாக அமைப்பு கூறியது.
விபத்து நிகழ்ந்த பகுதியில் முக்குளிப்பாளர்கள் காணாமல்போனவர்களைத் தேடினர். மற்றொரு குழுவினர் படகுகளில் சென்று நீரின் மேற்பரப்பில் தேடினர்.
தென்கிழக்கு சுலாவெசியில் பூட்டோன் தீவில் உள்ள லாண்டோ கிராமத்திலிருந்து மூனா தீவில் உள்ள லகிலி கிராமத்திற்குப் படகு சென்றுகொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்தது.