கோலாலம்பூர்: உலு சிலாங்கூர் அருகே இருக்கும் கோலா குபு பாருவில் உள்ள அலோர் லெம்பா பொழுதுபோக்கு பூங்காவில் 28 வயது இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இன்று காலை 7.54 மணியளவில் இந்த சம்பவம் குறித்து ஒரு பேரிடர் அழைப்பு வந்தவுடன் கோலா குபு பாரு தீயணைப்பு மற்றும் மீட்பு குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
காலை 10.50 மணியளவில் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைக்கு ஷா ஆலம் மற்றும் போர்ட் கிளாங்கில் இருந்து உலு சிலாங்கூர் மீட்புக் குழுவும் சம்பவ இடத்திற்கு வந்தது. பாதிக்கப்பட்டவரைத் தேடும் நடவடிக்கை அதிக நீரோட்டப் பகுதியிலும் ஐந்து மீட்டர் நீர் ஆழத்திலும் மேற்கொள்ளப்பட்டது. இன்னும் தேடுதல் பணி தொடர்கிறது என தெரியவந்துள்ளது.