கோலாலம்பூர் போலீஸ் தலைவராக அலாவுதீன் நியமனம்

கோலாலம்பூர், ஆகஸ்ட்டு 14:

கோலாலம்பூர் காவல்துறை தலைவராக டத்தோ அலாவுதீன் அப்துல் மஜிட் இன்று பதவியேற்றார்.

இதுவரை கோலாலம்பூர் காவல்துறை தலைவராக இருந்த டத்தோஸ்ரீ முகமட் ஷுஹைலி முகமட் ஜைன், புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் (JSJ) நேர்மை மற்றும் தரநிலைகள் இணக்கத் துறையின் (JIPS) துணை இயக்குநராக நியமிக்கப்பட்டதற்கு பதிலாக அலாவுதீன் நியமிக்கப்பட்டார்.

இந்த பதவி ஒப்படைப்பு விழா கோலாலம்பூர் கன்டிஜென்ட் போலீஸ் தலைமையகத்தில் (IPK) JIPS இயக்குனர் டத்தோஸ்ரீ அஸ்ரி அஹ்மட் தலைமையில் நடைபெற்றது.

கோலாலம்பூர் காவல்துறைத் தலைவராக பதிவியேற்ற அலாவுதீன் தனது பணியை தொடர்வதற்கு வாழ்த்துக்களையும் அஸ்ரி தெரிவித்தார்.

“அலாவுதீன், முன்பு அவருக்குக் கிடைத்த அனுபவத்தை வைத்துப் பார்த்தால், அவருடைய பொறுப்புகளைச் சிறப்பாகச் செய்ய அவ் அனுபவம் நிச்சயம் உதவும்.மேலும் கோலாலம்பூர் காவல்துறையின் அனைத்து உறுப்பினர்களும் அவரது தலைமைத்துவம் முழுவதும் அவருக்கு ஒத்துழைத்து ஆதரவளிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here