எத்தியோப்பியாவில் வான்வழித் தாக்குதல்: 26 பேர் பலி

எத்தியோப்பியாவில் நடைபெற்ற வான்வழி தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.

எத்தியோப்பியாவின் அம்ஹாரா பகுதியில் நடைபெற்ற வான்வழி தாக்குதலில் குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எத்தியோப்பியாவில் இராணுவம் மற்றும் உள்ளூர் போராளிகளுக்கு இடையிலான மோதல் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இது ஆளில்லா விமானத் தாக்குதல் என்று குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.

மனித உரிமைகள் ஆணையம், மனித உரிமைச் சட்டங்களை மீறுவதாகக் கூறப்படும் அனைத்து மோதல் சம்பவங்களை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here