எல்மினா விமான விபத்து : பலியானவரின் மனைவிக்கு பேரரசர் தனிப்பட்ட நன்கொடை

கோலாலம்பூர், ஆகஸ்ட்டு 19:

மாட் சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா, எல்மினா விமான விபத்தில் பலியான இட்ரிஸ் அப்துல் தாலிப்@ரமாலியின் மனைவி அட்லினா ஆயிஷா அகமட் ருஸ்லிக்கு தனிப்பட்ட நன்கொடை வழங்கினார்.

கடந்த வியாழன் அன்று சிலாங்கூர், ஷா ஆலாம், பண்டார் எல்மினா அருகே கெத்ரி விரைவுச்சாலையில் ஒரு தனியார் இலகுரக விமானம் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த பத்துப்பேரில் இட்ரிஸ் என்பவரும் ஒருவர்.

நேற்று மாமன்னரின் நன்கொடையை, அரண்மனையின் நிர்வாக தலைவர் டத்தோ அசுவான் எஃபென்டி ஜைராகித்னைனி அட்லினா ஆயிஷாவை அவரது வீட்டிற்குச் சந்தித்தபோது கொடுத்ததாக இஸ்தானா நெகாராவின் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விஜயத்தின் போது, ​​அவரது அன்பான கணவரின் திடீர் மறைவுக்கு பேரரசர் தம்பதியினர் ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்ததாக டத்தோ அசுவான் எஃபென்டி தெரிவித்தார்.

41 வயதான அட்லினா ஆயிஷா, இஸ்தானா நெகாராவில் 2011 முதல் 2015 வரை நிர்வாக அதிகாரியாக (மனித வளம்) இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here