சீனக் கடற்படையின் ETG162 என்ற PLA கடற்படைக் கப்பல், மூன்று நாள் பயணமாக நாட்டிற்கு சனிக்கிழமை (ஆகஸ்ட் 18) கிள்ளான் துறைமுகம் வந்தடைந்தது. கப்பலின் வருகையை ராயல் மலேசியன் கடற்படையின் (RMN), ரியர் அட்மிரல் டத்தோ ஈ தை பெங் உதவிப் பணியாளர்கள் செயல்பாடுகள் மற்றும் வியூகத் தலைவர் வரவேற்றார்.
சீனக் கடற்படையின் மூத்த கேப்டன் ஜாவோ லாங் தனது உரையில், கடற்படையின் வருகை சீனாவுக்கும் மலேசியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் பெரும் முக்கியத்துவம், உயர் நிலை மற்றும் உயிர்ச்சக்தியை முழுமையாக நிரூபித்ததாகக் கூறினார்.
சீனக் கடற்படையின் முதல் கப்பல் நாட்டிற்கு வந்ததிலிருந்து, அவர்கள் கூட்டுப் பயிற்சிகள் போன்ற பலதரப்பட்ட செயல்பாடுகளை நடத்தி வருவதாகவும், லங்காவி அனைத்துலக கடல் மற்றும் வான்வெளி (LIMA) கண்காட்சியில் இணைந்ததாகவும் அவர் கூறினார். விருந்தினர்களுக்கான சீன கலாச்சார நடனம் உள்ளடக்கிய நிகழ்ச்சி இன்று கப்பலில் நடைபெறும்.