சிம்பாங் ஜெராம் இடைத்தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவுகிறது

மூவார்: சிம்பாங் ஜெராம் இடைத்தேர்தல் பக்காத்தான் ஹராப்பானின் நஸ்ரி அப்துல் ரஹ்மான், பெரிக்காத்தான் நேஷனல் டாக்டர் முகமட் மஸ்ரி யாஹ்யா மற்றும் சுயேட்சை வேட்பாளர் எஸ். ஜெகநாதன் ஆகியோருக்கு இடையே மும்முனைப் போட்டியாக அமைகிறது. மூன்று வேட்பாளர்களின் வேட்புமனுக்களை காலை 10.13 மணிக்கு பெற்று ஏற்றுக்கொண்டதாக தேர்தல் ஆணையத்தின் தேர்தல் அதிகாரி ஜமில் ஹஸ்னி அப்துல்லா தெரிவித்தார்.

S. ஜெகநாதன் காலை 9.20 மணியளவில் வேட்புமனுத் தேர்வு மையத்திற்கு வந்தடைந்தார். அதே நேரத்தில் நஸ்ரி மற்றும் டாக்டர் முகமட் மஸ்ரி ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் முன்னதாகவே வந்தனர். எஸ்.ஜெகநாதன் முன்னதாக 14ஆவது பொதுத் தேர்தலிலும், கடந்த ஆண்டு ஜோகூர் மாநிலத் தேர்தலிலும் புக்கிட் நானிங் தொகுதியில் போட்டியிட்டார்.

டாக்டர் முகமட் மஸ்ரியும் GE14 இல் சிம்பாங் ஜெராம் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் மறைந்த டத்தோஸ்ரீ சலாவுடின் அயூப்பிடம் தோற்றார். இதற்கிடையில், பொறியாளர் நஸ்ரி அப்துல் ரஹ்மான் முதல் முறையாக போட்டியிடுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here