கிள்ளான் வாய்க்காலில் அடையாளம் தெரியாத சடலம் கண்டெடுப்பு

கிள்ளான்:

ஜாலான் கெபுனில் உள்ள வாய்க்கால் ஒன்றில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்றை போலீசார் கண்டுபிடித்ததை அடுத்து, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

நேற்று (ஆகஸ்ட் 27) இரவு சுமார் 10.29 மணியளவில் இந்த சம்பவம் குறித்து, ” ஜாலான் கெபுன் வழியிலுள்ள வாய்க்கால் பகுதியில் ஒரு உடலைக் கண்டெடுத்ததாக காவல்துறையினரால் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது ” என்று, சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை துணை இயக்குநர் (செயல்பாடுகள்) அகமட் முக்லிஸ் முக்தார் கூறினார்.

பின்னர் போலீசார் ஏணியை பயன்படுத்தி உடலை வாய்க்காலிலிருந்து அகற்றியதாகவும், சம்பவம் தொடர்பில் போலீஸ் விசாரணை தொடர்வதாகவும் அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here