கோம்பாக்:
வரும் 25 ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள இந்துக்களால் கொண்டாடப்படவுள்ள தைப்பூசத்தின்போது சுமார் இரண்டு மில்லியன் பார்வையாளர்கள் பத்துமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு வருகை தந்த பார்வையாளர்களின் அடிப்படையில் இந்தக் கணிப்பீடு செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
“கடந்த ஆண்டு, நாங்கள் 1.5 மில்லியன் பார்வையாளர்களைப் பதிவு செய்துள்ளோம், கோயில் நிர்வாகத்தின் தற்போதைய தகவல்களின் அடிப்படையில், இந்த ஆண்டு எண்ணிக்கை சுமார் இரண்டு மில்லியனாக இருக்கும்,” என்று அவர் இன்று (ஜன 22) பத்து மலையில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
மேலும் பத்துமலை முருகன் கோவில் பகுதிக்கான சீரான போக்குவரத்தை உறுதி செய்வதற்காக அப்பகுதியை சுற்றியுள்ள ஏழு சாலைகள் திங்கள்கிழமை (ஜனவரி 22) இரவு 10 மணி முதல் மூடப்படும் என்று அவர் கூறினார்.