ராக்கெட் கவுண்டவுனுக்கு குரல் கொடுத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ ந.விஞ்ஞானி காலமானார். ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதற்கான கவுண்டவுனுக்கு குரல் கொடுத்து வந்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி ந.வளர்மதி(64). இவர் மாரடைப்பு காரணமாக நேற்றிரவு காலமானார்.
2012ல் விண்ணில் ஏவப்பட்ட ரிசாட் 1 திட்ட இயக்குனராகவும் பணியாற்றினார். கடைசியாக சந்திரயான் 3 கவுண்டவுனுக்கும் வளர்மதி குரல் கொடுத்துள்ளார். குடியரசு முன்னாள் தலைவர் மறைந்த அப்துல் கலாம் நினைவாக தமிழக அரசு நிறுவிய கலாம் விருதை, 2015-இல் முதல்முறையாக பெற்றவர் வளர்மதி என்பது குறிப்பிடத்தக்கது.