3R தொடர்பில் முஹிடினுக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுக்கள் – போலீஸ் விசாரணை ஆரம்பம்

ஜோகூர்:

பூலாய் மற்றும் சிம்பாங் ஜெராம் இடைத்தேர்தலுக்கான அரசியல் பிரச்சாரத்தின் போது டான்ஸ்ரீ முஹிடின் யாசின் 3R (மதம், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இனம்) தொடர்பில் அவதூறான தகவல்களை வெளியிட்டது தொடர்பில் அவருக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுக்களை போலீசார் விசாரிக்கின்றனர்.

“அரசியல் ஃபத்வாக்கள் குறித்தும், மலாய்க்காரர்கள் அதிகாரத்தை இழப்பார்கள் என்று கூறியது தொடர்பில் விசாரிக்க பெரிக்காத்தான் நேஷனல் தலைவரான முஹிடினை போலீசார் செப்டம்பர் 12ஆம் தேதி அழைத்து, வாக்குமூலத்தைப் பதிவு செய்வார்கள் என்று தேசிய காவல்துறை துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here