கோலாலம்பூரில் சூதாட்ட அழைப்பு மையத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது 12 பேர் கைது

கோலாலம்பூர்:

நகரில் உள்ள சட்டவிரோத சூதாட்ட அழைப்பு மையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் உள்ளூர் (6) மற்றும்  வெளிநாட்டினர் (6) கைது செய்யப்பட்டனர்.

19 முதல் 37 வயதுடைய சந்தேக நபர்கள் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 8) ஒரு நடவடிக்கையில் தடுத்து வைக்கப்பட்டதாக பிரிக்ஃபீல்ட்ஸ் OCPD உதவி ஆணையர் அமிஹிசாம் அப்துல் ஷுகோர் தெரிவித்தார்.

அவர்களிடமிருந்து நான்கு கணினிகள், ஐந்து மடிக்கணினிகள், 19 மொபைல் போன்கள் மற்றும் இரண்டு பாஸ்போர்ட்கள் உட்பட பல பொருட்களை கைப்பற்றியதாக இன்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 10) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.

“அவர்கள் பங்களாதேஷில் இருந்து பாதிக்கப்பட்டவர்களை குறிவைத்து தாக்கினர். சந்தேகநபர்கள் அனைவரும் மேலதிக விசாரணைகளுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் ” என அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here