மூடா பெரிக்காத்தானில் சேருவது குறித்து ஒருபோதும் ஆலோசித்ததில்லை – அமீர் ஹாடி

பெட்டாலிங் ஜெயா:

பெரிக்காத்தான் நேசனலில் இணைவதற்கான விருப்பம் ஒருபோதும் விவாதிக்கப்படவில்லை என்று மூடாவின் பொதுச்செயலாளர் அமீர் ஹாடி தெரிவித்தார்.

கெராக்கான் தலைவர் டத்தோ டொமினிக் லாவ், வரவிருக்கும் பெரிகாத்தான் தலைமைக் கூட்டத்தில் கூட்டணியில் சேருவதற்கு மூடாவை முன்மொழிய விரும்புவதாகக் கூறியது தொடர்பில், அவர் கருத்து தெரிவித்தபோது இவ்வாறு கூறினார்.

“அதிகாரப்பூர்வமாகவோ அல்லது அதிகாரப்பூர்வமற்றதாகவோ பெரிக்காத்தானில் சேர மூடா எந்த விண்ணப்பத்தையும் இதுவரை சமர்ப்பிக்கவில்லை” என்று அமீர் இன்று சனிக்கிழமை (செப்டம்பர் 16) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here