தேசிய கராத்தே வீரர் முஹமட் ஆரிப் மலேசியாவுக்கான ஆறாவது தங்கப் பதக்கத்தை வென்றார்

ஹாங்சோ:

ஹாங்சோவில் நடைபெற்றுவரும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், தேசிய கராத்தே வீரரான முஹமட் ஆரிஃப் அபிஃபுடின் அப்துல் மாலிக், 84 கிலோகிராம் எடைக்குக் குறைவான ஆண்களுக்கான Kumite (combat) போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் நாட்டிற்காக ஆறாவது தங்கப் பதக்கத்தை வென்றார்.

லின்பிங் ஸ்போர்ட்ஸ் சென்டர் ஜிம்னாசியத்தில் நடந்த இறுதிப் போட்டியில் 2021 உலக சாம்பியன்ஷிப் வெண்கலப் பதக்கம் வென்ற கஜகஸ்தானின் டானியார் யுல்டாஷேவை 10-4 என்ற கணக்கில் தோற்கடித்தார்.

இறுதிப் போட்டியில், 1.83 மீட்டர் உயரம் கொண்ட முஹமட் ஆரிப் அபிஃபுடின், 1.89 மீ உயரமுள்ள டானியாரை எதிர்த்து போட்டியிட்டார். அச்சுற்றின் 15 வினாடிகளில் அவர் காயம் அடைந்தாலும் ,இறுதியில் தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here