மேற்கு ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 320 பேர் உயிரிழப்பு, நூற்றுக்கணக்கானோர் காயம்

காபூல்:

மேற்கு ஆப்கானிஸ்தானில் நேற்றுக் காலை 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில், குறைந்தது 320 பேர் உயிரிழந்தனர் மற்றும் 600க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இதனால் ஏற்பட்ட நிலச்சரிவினால் இடிபாடுகளுக்கு அடியில் பலர் சிக்கியிருக்கக்கூடும் என்பதால் பலியானோர் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

அதிகாரிகளின் கூற்றுப்படி, ஜிந்தா ஜன் மற்றும் கோரியான் மாவட்டங்களில் 12 கிராமங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஹெராட் நகரின் வடமேற்கில் 40 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கத்தின் மையம் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) அறிவித்துள்ளது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 4.5 மற்றும் 6.3 ரிக்டர் அளவில் ஏழு நில அதிர்வுகளும் நிகழ்ந்துள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here