கோலாலம்பூர்:
இன்று செவ்வாய் (அக். 10) காலை 9 மணி நிலவரப்படி, நாட்டின் நான்கு பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்று மாசுக் குறியீடு (API) அளவீடுகள் பதிவாகியுள்ளன.
இதில் செராஸில் அதிகபட்சமாக காற்று மாசுக் குறியீடு 169 ஆகப் பதிவாகியுள்ளது.
சுற்றுச்சூழல் துறையின் (DOE) காற்று மாசுபாடு குறியீட்டு மேலாண்மை அமைப்பின் (APIMS) அடிப்படையில், 100 க்கு மேல் API உள்ள மற்ற பகுதிகளாக பத்து பகாட் (158) மற்றும் ஜோகூரில் உள்ள லார்க்கின் (137), அத்துடன் மலாக்காவின் புக்கிட் ராம்பாய் (156) ஆகிய பதிவு செய்தன.
இதற்கிடையில், நாட்டிலுள்ள 60 பகுதிகள் 51-100 அளவீடுகளுடன் மிதமான காற்று மாசுபாட்டை பதிவு செய்துள்ளன,ஏனைய நான்கு பகுதிகள் 50 க்கும் குறைவான API அளவீடுகளை பதிவு செய்துள்ளன.
0- 50 வரையிலான API வாசிப்பு காற்றின் தரம் நன்றாக இருப்பதைக் குறிக்கிறது; 51- 100 வரை மிதமான காற்று மாசுபாடு ; 101 – 200 வரை ஆரோக்கியமற்றது; 201 – 300 வரை மிகவும் ஆரோக்கியமற்றது; மற்றும் 300க்கு மேல் அபாயகரமானது என்பது குறிப்பிடத்தக்கது.