புகைமூட்டம் நீடிக்க வாய்ப்பில்லை – நிக் நஸ்மி

கோலாலம்பூர்:

நாட்டில் அடிக்கடி மாறிவரும் காற்றின் திசை காரணமாக தற்போது நிலவும் புகைமூட்ட நிலை நீடிக்காது என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது என்று, இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமட் தெரிவித்துள்ளார்.

ஆனால் காற்று மாசு குறியீடு (IPU) 24 மணி நேரத்திற்கும் மேலாக ஆரோக்கியமற்ற அளவு அதாவது 151 முதல் 200 வரை மோசமடைந்தால், செயற்கைமழைக்கான மேக விதைப்பு நடவடிக்கைகள் தொடரும் என்று, அவர் நேற்று மக்களவையில் கூறினார்.

கணிப்பு மாதிரிகளைப் பயன்படுத்தி ஐந்து நாட்கள் வரை எல்லை தாண்டிய புகைமூட்டத்தின் நகர்வுக்கான முன்னறிவிப்பையும் MetMalaysia வழங்குகிறது என்று அவர் கூறினார்.

அதே நேரத்தில், நாடு முழுவதும் திறந்தவெளி எரிப்பு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும், பெரிய அளவில் திறந்தவெளி எரிப்பு சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்றும் அவர் கூறினார்.

“செப்டம்பர் 30 வரை, சுற்றுச்சூழல் துறைக்கு (DOE) மொத்தம் 3,922 திறந்தவெளி எரிப்பு வழக்குகள் கிடைத்துள்ளன, அவற்றில் 80 சதவீதம் குப்பைகளை எரிப்பது தொடர்பானது,” என்று அவர் கூறினார்.

மேலும் அடுத்த மாதம் முதல், நாடு வடகிழக்குப் பருவமழையைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, குறிப்பாக கிழக்குக் கரையோர மாநிலங்களான தீபகற்ப மலேசியா மற்றும் மேற்கு சரவாக் ஆகிய இடங்களில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது புகைமூட்டப் பிரச்சினையைப் போக்க உதவும் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here