கோலாலம்பூர்:
TVET எனப்படும் தொழில்நுட்பம் மற்றும் தொழில் பயிற்சி துறையை வலுப்படுத்தும் நோக்கில், 2024-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் 680 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.
TVET பட்டதாரிகளுக்குச் சான்றிதழ் வழங்கும் திட்டத்திற்காக 10 கோடி வெள்ளி இந்த ஒதுக்கீட்டில் உட்படுத்தப்பட்டிருக்கிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்த போது அறிவித்தார்.
160 கோடி வெள்ளி நிதியைப் பயன்படுத்தி மனிதவள மேம்பாட்டு வாரியம் 17 லட்சம் பயிற்சிகளை வழங்கும்.
தொழில்முனைவோர், ஊனமுற்றோர், முதியவர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் ஆகிய பிரிவினருக்கு மடானி பயிற்சி திட்டம் வழி பயிற்சிகள் வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டார்.