நகரத்தில் நடைபெறும் எந்த பேரணியிலும் பங்கேற்க விரும்பும் பொதுமக்கள் சாலை விதிகள் மற்றும் விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். பதாகைகளை ஏந்தியவாறு மோட்டார் சைக்கிள்களில் பேரணியில் கலந்து கொண்ட சில நபர்களை போலீசார் கண்டுபிடித்ததாக கோலாலம்பூர் காவல்துறை தலைவர் டத்தோ அலாவுதீன் அப்துல் மஜித் கூறினார்.
மோட்டார் சைக்கிள் ஓட்டும் போது பேனர்களை எடுத்துச் செல்வது மற்றும் அசைப்பது சட்டத்திற்கு எதிரானது. ஏனெனில் இது மற்ற சாலைப் பயணிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும்.
செவ்வாய்க்கிழமை (அக் 24) KL காவல்துறையின் மாதாந்திர கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறுகையில், அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பதை உறுதிசெய்ய நாங்கள் இன்னும் நகரத்தில் போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
இந்த வாரம் பல கட்சிகள் பேரணிகளை நடத்துவதை அறிந்திருப்பதாக அலாவுதீன் கூறினார். கூடுவதற்கான உரிமையை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். ஆனால் அது சட்டங்களின்படி இருக்க வேண்டும். சில அமைப்பாளர்கள் எங்களிடம் அனுமதி பெற்றிருக்கின்றனர். மற்றவர்கள் செய்யவில்லை என்று அவர் கூறினார்.
இன்று செவ்வாய்கிழமை (அக் 24) இரவு புக்கிட் ஜாலில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்துகொள்ளும் பாலஸ்தீனத்திற்கான கூட்டம் குறித்து கருத்து தெரிவித்த அலாவுதீன், காவல்துறை போதிய ஏற்பாடுகளை செய்துள்ளதாக கூறினார். நிகழ்ச்சி சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வோம் என்றார் அவர்.








