மோட்டார் சைக்கிள் மீது லோரி மோதியதில் மனைவி பலி; கணவர் படுகாயம்

பெட்டாலிங் ஜெயா:

நேற்று நள்ளிரவு, கூட்டரசு நெடுஞ்சாலையில் 18.6 ஆவது கிலோமீட்டரில் மோட்டார் சைக்கிள் மீது லோரி மோதிய விபத்துக்குள்ளானதில் மனைவி மரணம், கணவர் படுகாயமடைந்தார்.

Yamaha Sport மோட்டார் சைக்கிளில் பயணித்த 58 வயதுடைய பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார், அதேவேளை 76 வயதுடைய கணவர் பலத்த காயமடைந்து ஷா ஆலாம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என, பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் முகமட் ஃபக்ருதீன் அப்துல் ஹமீத் கூறினார்.

குறித்த சம்பவம் தொடர்பில் நள்ளிரவு 1.05 மணிக்கு காவல்துறைக்கு தகவல் கிடைத்தது என்றும், முதற்கட்ட விசாரணையில், நள்ளிரவு 12.36 மணியளவில் தம்பதிகள் பத்து திகா, ஷா ஆலாமில் இருந்து சுபாங் பள்ளத்தாக்கு நோக்கி பயணித்தபோது விபத்து ஏற்பட்டது” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 இன் பிரிவு 41(1) இன் படி போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் (IPD) போக்குவரத்து புலனாய்வு அதிகாரி இன்ஸ்பெக்டர் முகமட் நஜிப் முகமட் அஜாமானை 012-3526147 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here