சாலையோரக் கடைக்குள் புகுந்த லோரி: ஐயப்ப பக்தர்கள் 10 பேர் பலி

புதுக்கோட்டை:

சாலையோர தேநீர் கடைக்குள் திடீரென லோரி புகுந்ததில் 10 பேர் பலியாகியுள்ளனர். இந்தச் சம்பவம் புதுக்கோட்டை மாவட்டம், நந்தன சமுத்திரம் பகுதியில் நிகழ்ந்துள்ளது.

அரியலூரில் இருந்து சிமெந்து மூட்டைகளை ஏற்றிக் கொண்டு திருமயம் பகுதியை நோக்கி அந்த லோரி சென்று கொண்டு இருந்தது.

நந்தன சமுத்திரம் பகுதியை நெருங்கியபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய அந்த லோரி, இறுதியில் சாலையோரத்திலிருந்த கடைக்குள் புகுந்தது.

விபத்தின்போது அக்கடைக்கு அருகே நின்றிருந்த இருந்த வேன், கார் மீதும் லோரி மோதியது. இந்த விபத்தில் வேன், காரில் இருந்த ஐய்யப்ப பக்தர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். அதே நேரத்தில் கடையில் தேநீர் அருந்திக் கொண்டிருந்த19 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர்.

விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தலா ரூ.2 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here