கோலாலம்பூர்:
நாடு முழுவதும் தீபாவளியை கொண்டாடும் அனைத்து இந்துக்களுக்கும் மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா மற்றும் பேரரசியார் துங்கு அசிசா அமினா மைமுனா இஸ்கந்தரியா ஆகியோர் இனிய தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
இஸ்தானா நெகாராவின் இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் தங்கள் வாழ்த்துக்களை அவர்கள் பதிவிட்டுள்ளனர்.
“இந்தப் பண்டிகை அனைத்து இந்துக்களுக்கும் அமைதி, செழிப்பு, மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்தின் ஒளியைக் கொண்டு வரட்டும்” என்று அதில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.