அம்பாங்:
கடந்த புதன்கிழமை, இங்குள்ள ஜாலான் மேவா 3, தாமான் அம்பாங் மேவாவில், கடையில் புகுந்து பணப்பைகள் மற்றும் ஹெல்மெட்களைத் திருடியதாக சந்தேகத்தின் பேரில் ஐந்து ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.
அதிகாலை 4.30 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், சந்தேக நபர்கள் அனைவரும் குடிபோதையில் இருந்ததாக நம்பப்படுகிறது என்று அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறையின் தலைவர் துணை ஆணையர் முகமட் அசாம் இஸ்மாயில் கூறினார்.
அவர்கள் வீட்டின் உள்ளே புகுந்தபோது பாதிக்கப்பட்டவர் அங்கு இல்லை என்றும், ஆனால் அவரது காதலியால் சம்பவம் குறித்து அவருக்கு தெரிவிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.
“பாதிக்கப்பட்டவர் வீடு திரும்பியதும், வீட்டின் கதவு சேதமடைந்து, திறந்து கிடப்பதைக் கண்டார், உள்ளே சென்று பார்த்தபோது, இரண்டு மியன்மார் ஆண்கள் மற்றும் யாரென்று தெரியாத 5 ஆண்கள் வீட்டுக்குள் இருப்பதைக் கண்டார்.
“சம்பந்தப்பட்ட ஐந்து உள்ளூர் சந்தேக நபர்கள் பாதிக்கப்பட்டவரின் வாடகை வீட்டின் அறையில் இருந்த இரண்டு மியான்மர் ஆண்களை அடித்து, ரொக்கம் RM400 கொண்ட பணப்பை மற்றும் தலைக்கவசம் ஆகியவற்றை திருடினர்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பின்னர் தாக்கப்பட்ட இரண்டு மியான்மர் ஆண்களையும் தூக்கிக்கொண்டு அவர்கள் ஐந்து பேரும் வெளியேறினர் என்று முகமட் ஆசாம் கூறினார்.
தகவலின் பேரில், சுமார் 24 முதல் 26 வயதுடைய ஐந்து உள்ளூர் ஆண்களை அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறை கைது செய்ததாக அவர் கூறினார்.
“சம்பவத்தின் போது, சந்தேகப்பட்ட நபர்கள் குடிபோதையில் குறித்த இரு மியன்மார் ஆண்களை அடித்ததாக விசாரணையில் கண்டறியப்பட்டது.
“கடை வீட்டில் வசிப்பவர்கள் மேல் மாடியில் இருந்து மணலை வீசியதாகக் கூறி, சந்தேக நபர்கள் மியன்மார் நபர்களை மாடிக்கு அழைத்துச் சென்று பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்குள் புகுந்தனர்,” என்று அவர் கூறினார்.
விசாரணையில், சந்தேக நபர்களில் நான்கு பேர் பல குற்றவியல் பதிவுகள் மற்றும் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடையதாக காவல்துறை கண்டறிந்துள்ளது, அவர்களில் ஒருவருக்கு முந்தைய பதிவு எதுவும் இல்லை.
“ஒரு கார், இரண்டு ஹெல்மெட்கள், ஒரு கார் சாவி மற்றும் ஒரு பிவிசி பைப் ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றினர்.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 395 (குழுக் கொள்ளை) இன் படி விசாரணையில் உதவுவதற்காக அனைத்து சந்தேக நபர்களும் நவம்பர் 16 முதல் 7 நாட்களுக்கு காவலில் வைக்கப்பட்டனர்,” என்று அவர் கூறினார்.





















